பதிவு செய்த நாள்
26
மே
2016
11:05
குறிச்சி: சுந்தராபுரம் அருகே, செங்கோட்டையா காலனி நாக காளியம்மன் கோவிலின், 19ம் ஆண்டு விழா, நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பலி பீட வழிபாடு, அம்மன் கொடி கட்டுதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை குறிச்சி குளக்கரையிலுள்ள பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரக ஊர்வலம், சிங்க வாகனத்தில் அம்மன் அலங்காரத்துடன் வர புறப்பட்டது. பொள்ளாச்சி மெயின் ரோடு, சாரதா மில் ரோடு, ராஜ முத்தையா நகர் வழியாக கோவிலை சென்றடைந்தது. மதியம் மகா அபிஷேக பூஜை, அன்னதானமும், மாலை மாவிளக்கு வழிபாடும் நடந்தன. திரளானோர் பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர். இன்று காலை மஞ்சள் நீராட்டும், அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. நாளை மாலை, 6:00 மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்தனர்.