அன்னுார்: சாலையூர் பழநி ஆண்டவர் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சாலையூரில், 1,000 ஆண்டு பழமையான பழநி ஆண்டவர் மற்றும் இடும்பன் கோவில் சிறு குன்றின் மீது உள்ளது. இக்கோவில் சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது. கோவிலில் எப்போதும் வற்றாத சுனை உள்ளது. இக்கோவிலில், நல்லிசெட்டி பாளையம், செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது. முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.