பதிவு செய்த நாள்
26
மே
2016
11:05
மீஞ்சூர்: வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் தேர் திருவிழாவில், புதிய தேரில், பெருமாள் பவனி வந்தார். வடகாஞ்சி எனப்படும், மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்வசம் துவங்கியது. தொடர்ந்து, கருடசேவை, பெருமாள் திருக்கல்யாணம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற்றன. நேற்று, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட, 45 அடி மரத்தேரில், உற்வச பெருமாள் மாட வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்று ஆண்டுகளாக சிதிலமடைந்த பழைய தேரில், தேர் திருவிழா நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், தேரை இயக்க பொதுப்பணி துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று தேரோட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு புதிய தேரில் தேர் திருவிழா நடைபெற்றது பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.