பதிவு செய்த நாள்
27
மே
2016
12:05
கோவை: மீனாட்சியம்மன், பட்டத்தரசியம்மன், மதுரை வீரன் கோவில், 129ம் ஆண்டு திருவிழாவில் நேற்று நடந்த சுவாமி வீதியுலாவில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையத்தில் மீனாட்சியம்மன், பட்டத்தரசியம்மன் மற்றும் மதுரைவீரன் கோவில் உள்ளது. கோவில் 129ம் ஆண்டு திருவிழா, மே 24ம் தேதி முனியப்பன் பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பட்டத்தரசியம்மன் கோவிலிலிருந்து அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று காலை, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன், சுவாமி ஊர்வலம் நடந்தது; பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், பொங்கல் வழிபாடு நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, கோவிலில் இருந்து மாவிளக்கு எடுக்கப்பட்டு, சக்தி காளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலை, 4:00 மணிக்கு, தீப்பந்தாட்டம், இரவு, 9:00 மணிக்கு, மதுரை வீரன் சுவாமி, காளியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்று வருகிறது. நாளை காலை, 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டும், மதியம், உச்சிகால பூஜையும் நடக்கிறது.