புதுச்சேரி: புதுச்சேரி பெருமாள் கோவில் வீதி, கேன்டீன் வீதி சந்திப்பில் தேவி ஏழைமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி மிருத்சங்கிஹரணம், அக்கினி பிரவேசம் நடந்தது. அன்று மாலை 6 மணிக்கு அங்குரார்பணம் ஆச்சாரிய வர் ணம் முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. புனிதநீர் கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்து, 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாட்டை திருப்பணி கமிட்டி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.