பதிவு செய்த நாள்
30
மே
2016
10:05
தர்மபுரி: காசிக்கு அடுத்தபடியாக, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தான், தட்ஷண கால பைரவருக்கு தனி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருவதுடன், பல்வேறு காரியங்கள் நடக்க பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு பிரார்த்தனை செய்த பக்தர் ஒருவர், தனது வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, கால பைரவருக்கு தங்க சூலத்தை நேற்று காணிக்கையாக செலுத்தினார். இதையடுத்து, நேற்று சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் தங்க சூலத்துடன் பக்தர்களுக்கு கால பைரவர் அருள்பாலித்தார். மேலும், நேற்று, 12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார பூஜை நடந்தது. இரவு, 10.30 மணிக்கு சத்ரு சம்ஹார யாகம், குருதி பூஜை நடந்தது.