விருத்தாசலம்: விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர். விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு பாத்திமா அன்னை ஆலய தேர் பவனியொட்டி, கடந்த 20ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் தினசரி சிற ப்பு திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு ஆலயத்திலிருந்து அலங்கரித்த தேரில் பாத்திமா அன்னை ஊர்வலம் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 8:00 மணியளவில் திருப்பலி யுடன் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது.