மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் இங்கு அகோரமூர்த்தியாக தனி சன்னதி கொண்டு விளங்கிவருகிறார். அகோரமூர்த்தி சன்னதியில் எட்டு பைரவர்கள் இருப்பது மிகவும் விஷேசமானதாக உள்ளது. இவரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம். ருத்திராஷம் சிவனுக்கு மிகமுக்கியமான ஒன்றாகும். சன்னதிகளில் ருத்திராஷம் கொண்டு பந்தல் அமைத்தால் சன்னதியில் குளிர்ச்சியாகும். இதன்படி அகோரமூர்த்தி சன்னதியில் 10008 ருத்திராஷங்கள் கொண்டு பந்தல் அமைக்கபட்டது. கஞ்சனூரை சேர்ந்த கலியபெருமாள்பத்தர் இந்த பந்தலை செய்து தந்தார். இந்த பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப ட்டன. பின்னர் அகோரமூர்த்தி சன்னதியில் அமைக்கப்பட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகையன், கோயில் மேலாளர் கண்ணன், அர்ச்சகர்கள் குருசிவாச்சாரியார், வினோத் குருக்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.