பழநி கோயிலில் 1500 பக்தர்கள் தங்க ரதம் இழுத்து வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2016 10:06
பழநி,: பழநி மலைக் கோயிலில் கடந்த 10 நாட்களில் அதிகபட்சமாக 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்க ரதம் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமான பழநி மலைக் கோயிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்குமேல் தங்கரதத்தில் சின்னக்குமாரசாமி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் தங்கரதம் இழுத்து வழிபட ரூ.2,000 கட்டணமாக அன்று மாலை 5 மணி வரை செலுத்தலாம்அவர்களுக்கு சிறப்பு தரிசன சலுகை, பஞ்சாமிர்தம், காமாட்சி விளக்கு, சுவாமிபடம், தேங்காய், பழம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. தங்கரதம் வெளிப் பிரகாரத்தில் உள்ள 10 உலா நிலைகளில் சுற்றிவந்து நிலையை அடைகிறது. ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்கள் பணம் கட்டியிருந்தாலும் தங்கரதம் ஒரே ஒரு முறை மட்டுமே வெளிப் பிரகாரத்தை சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க தங்க ரதத்தை சாதாரண நாட்களில் 50 முதல் 70 பக்தர்கள் பணம் கட்டி இழுக்கின்றனர். இது விடுமுறைநாட்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும். அதன்படி கோடை விடுமுறை கடைசி 10 நாட்கள் அதாவது மே 21 முதல் மே 30 வரை மொத்தம் 1,538 பக்தர்கள் தங்கரதம் இழுத்து சுவாமி ஞானதண்டாயுத பாணியை தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மே 21ல் 198 பக்தர்கள் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.