சமர்ப்பன சேவை மையத்தில் சக்தி கணபதிக்கு விளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2016 11:06
விழுப்புரம்: சமர்ப்பன சேவை மைய சக்தி கணபதி கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. விழுப்புரம் சமர்ப்பன சேவை மையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு சக்தி கணபதிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை விக்னேஷ் குருக்கள் செய்திருந்தார். இதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.