பதிவு செய்த நாள்
01
ஜூன்
2016
11:06
ஆர்.கே.பேட்டை: அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த, கொடிவலசா மற்றும் பாத்தகுப்பம் கிராமங்களில் நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளினார். அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த, கொடிவலசா கிராமத்தில் நேற்றும், இன்றும் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடக்கிறது. கொடிவலசாவில், நேற்று காலை அம்மனுக்கு கூழ் வார்த்தலும், பொங்கல் வைத்தலும் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளினார். இன்று, கங்கையம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. இதே போல், பாத்தகுப்பம் கிராமத்தில், கங்கையம்மன் திருவிழாவை ஒட்டி, அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பொதட்டூர்பேட்டை கூட்டு சாலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், காலை, 10:00 மணிக்கு, பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, மேளதாளங்கள் முழங்க, அம்மன் வீதியுலா எழுந்தருளினார்.