விவேகானந்தர் பிறக்கும் முன், அவரது தாய் புவனேஸ்வரி, தனக்கு பிறக்கும் குழந்தைக்கு சிவனின் பெயரிடுவதாக, காசி விஸ்வநாதரை வேண்டிக் கொண்டார். அதன்படியே, சிவபெருமானின் திருநாமத்தில் ஒன்றான வீரேஸ்வர் என்று பெயரும் வைத்தார். ஆனால், விவேகானந்தரின் தந்தை அதை ஒத்துக்கொள்ளாமல், பள்ளியில் சேர்க்கும் போது, நரேந்திரன் என்று பெயர் சூட்டிவிட்டார். இவரை பீலே என்று செல்லமாக கூப்பிடுவர்.