சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. புதிய சிற்பத்தேருக்கு பூஜாரி கணேசன் சிறப்பு பூஜைகள் செய்தார். பின் தேர்திருப்பணி குழுத் தலைவர் சுப்பிரமணியம், தாசில்தார் திருமலை, அறநிலையத்துறை இணை கமிஷனர் பச்சையப்பன், டி.எஸ்.பி., வேல்முருகன், இன்ஸ்பெக்டர் து?யமணி வெள்ளச்சாமி, பேரூராட்சி அதிகாரி ராஜா, வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கினர். தெற்கு மற்றும் மேலத்தெருவில் சில மின் கம்பங்களில் 8 அடி து?ரம் நீட்டிக்கொண்டிருந்த மின்கம்பிகளால் தேரின் அலங்கார துணிகள் கிழிந்து சேதமானது. 60 அடி அகலமான வடக்கு ரத வீதியில் கடைகளின் ஆக்கிரமிப்பால், தேர் தாமதமாக நகர்ந்து சென்றது. வடம்பிடித்த பக்தர்கள் தேரை இழுப்பதில் மிகவும் சிரமப்பட்டனர். ஆக்கிரமிப்பை கடந்து செல்ல ஒரு மணி நேரமானது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் விஸ்வநாத், நிர்வாக அதிகாரி லதா செய்திருந்தனர்.