Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் :சங்க கால பொருட்கள் கண்டெடுப்பு! கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி கோயில் பொற்றாமரைக்குளம் 3 ஆண்டாக தண்ணீர் வற்றாமல் சாதனை!
எழுத்தின் அளவு:
மீனாட்சி கோயில் பொற்றாமரைக்குளம் 3 ஆண்டாக தண்ணீர் வற்றாமல் சாதனை!

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
10:06

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக்குளத்தில் மூன்றாண்டுகளாக தண்ணீர் வற்றாமல் உள்ளது. இதன் மூலம் சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் சாதனை படைத்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் கோடை காலத்தில் வறண்டு விடும். இங்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்க தக்கார் கருமுத்து கண்ணன் முயற்சி எடுத்தார். இதையடுத்து சென்னை ஐ.ஐ.டி., நீர் மேலாண்மை தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவினர் 2013ல் மதுரை வந்தனர். இங்குள்ள வற்றாத கண்மாய்களை ஆய்வு செய்தனர். இதே தொழில்நுட்பத்தை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்திலும் புகுத்த முடிவு செய்தனர்.

குளத்தில் தண்ணீர் நிரந்தரம் :
இதையடுத்து பொற்றாமரைக்குளத்தின் தரைத்தளம் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக கண்மாயில் இருந்து மண் சேகரித்து பொற்றாமரைக்குளத்தில் கொட்டப்பட்டது. பின் சோதனை ஓட்டமாக குளத்தில் இரண்டு அடிக்கு தண்ணீர் நிரப்பினர். தண்ணீர் வற்றியதும் மீண்டும் இரண்டு அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. இப்படி பல கட்டங்களாக சோதனை முடிக்கப்பட்டது. தற்போது குளத்தில் மூன்று ஆண்டுகளாக தண்ணீர் வற்றாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருக்க காரணமான ஐ.ஐ.டி., குழுவினரின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

தூய்மை கோயில் : மத்திய அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம் பெற்றுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலை பொறுத்தமட்டில் தூய்மை கோயிலாக பராமரிக்கப்படுகிறது. இதன்படி பராமரிப்பு பணிகள், சிதிலமடைந்த சிலைகள் பராமரிப்பு, கோபுரங்கள் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பக்தர்கள் தங்கும் விடுதி, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் துவங்கவுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் அறநிலைய ஆட்சித்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar