பதிவு செய்த நாள்
25
ஜூன்
2016
11:06
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நடந்த ஆனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் விழா கொடியேற்றத்துடன் துவங்கி 13 நாளாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி, தயார் ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 8.20 மணிக்கு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருள அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். விருதுநகர் கலெக்டர் (பொறுப்பு) முத்துக்குமரன், திருத்தங்கல் நகராட்சி தலைவர் தனலட்சுமி கணேசன், துணைத் தலைவர் பொன் சக்திவேல், தக்கார் சுவர்ணாம்பாள், முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷமிட்ட படி தேரை இழுத்து சென்றனர். தேரோட்டத்தின் போது விருதுநகர் - சிவகாசி ரோட்டில் வந்த பஸ்கள், கனரக வாகனங்கள் செங்கமலநாச்சியார்புரம் வழியாகவும், சிவகாசியில் இருந்த வந்த வாகனங்கள் வேலாயுத ரஸ்தா சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.