Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த சமயத்தில் பூஜை வேண்டாமே! குழந்தைகள் எந்த வயதிலிருந்து விரதம் மேற்கொள்ளலாம்? குழந்தைகள் எந்த வயதிலிருந்து விரதம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உறுதியான மனம் உள்ளவர்களுக்கு ..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
05:06

*உறுதியான மனம் கொண்டவனே துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலும், பொற்காலத்தை அனுபவிப்பவனுமாக இருப்பான். அவனுக்காகவே காலையில் சூரியன் வெளிச்சத்தைப் பரப்புகிறான்.
*தவறை ஒப்புக்கொண்டு மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால், மனம் பால் போல தெளிவடையும். வெண்மைக்கு உண்டோ கள்ளச்சிந்தை என்று இதன் பெருமையைக்
குறிப்பிடுவார்கள்.
*தர்மத்தை விட்டு விலகாதவனே எல்லா உயிர்களையும் நேசிப்பான். ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய ஓடோடி வருவான்.
*பிறர் செய்த குற்றத்தை மன்னிக்கும் மனம் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும். மன்னிக்கும் குணத்தால் அச்சம் அகலும். மனத்துõய்மையும் பெருகும்.
*பிறர் பொருளைக் கண்டு ஆசைப்படுபவன் வாழ்வில் திருப்தி அடைய முடியாது. நாளடைவில் அவன் இந்த தாழ்ந்த குணத்தின் பிடியில் சிக்கி சுதந்திரத்தை இழப்பான்.
*வேடிக்கையாகவோ, கோபத்தினாலோ, பண ஆசையினாலோ, பிறருக்கு பயந்தோ மனிதன் பொய் பேசத் தொடங்குகிறான். எந்த சூழலிலும் பொய் பேசாதவனே உலகில் சான்றோனாக மதிக்கப்படுவான்.
*உண்மையே உள்ளத்தை சுத்தமாக்கும். உள்ளத்துõய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. அதனால் பொய்யை விலக்கி விட்டு உண்மையின் பாதையில் செல்லுங்கள்.
*பட்டினி, நோய், கவலையால் வாடுபவர்களுக்கு தேவையான உணவும், மருந்தும் கொடுத்து உதவுங்கள். அவர்கள் மனம் மகிழும் விதத்தில் ஆறுதல் மொழிகளைக் கூறுங்கள்.
*பேராசை படைத்தவனுக்கு இந்த உலகம் முழுவதையும் பரிசளித்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருப்பவன் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
*கூட்டு முயற்சியால் கிடைத்த பொருளை கூட்டாளிகளுக்கும் பகிர்ந்தளியுங்கள். சுயநலம் சிறிதுமின்றி பொது நலத்துடன் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.
*தேவைக்கு மேல் கிடைத்த பணத்தை சேமிப்பதை விட, தேவையுள்ளவனுக்கு கொடுங்கள். பணம் சேரச் சேர மனிதனிடம் ஒழுக்கம், நேர்மை குறைந்து விடும்.
*வாழ்க்கையை நம் விருப்பம் போல நீட்டிக்க முடியாது. இந்த குறுகிய காலத்தை நம் முன்னேற்றத்திற்கும், பிறர்நலனுக்கும் பயன்படுத்துங்கள்.
*நல்ல நம்பிக்கையின்றி நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு இல்லாமல் நல்லொழுக்கம் உண்டாகாது. அதனால் மனிதன் எப்போதும் நல்ல நம்பிக்கை கொண்டவனாக இருப்பது அவசியம். (மகான் மகாவீரர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar