Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்ன வேண்டும் என சிந்திப்போமா! திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தைகளின் செயலுக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
04:06

தங்கள் குழந்தைகளுக்கு கெட்ட பழக்கங்கள் தொற்றக்கூடாது என்று கருதும் பெற்றவர்கள் தாங்களும் அந்த  பழக்கத்தை விட வேண்டும். குழந்தை நன்றாக படிக்க வேண்டும். முதல் ராங்க் வாங்க வேண்டும் என எதிர்பார்க்கும் பெற்றோர் அவர்கள் டிவி பார்த்தால் கண்டிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அப்பழக்கத்தை விட முடியவில்லை. படிக்கும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமல், அவர்களை ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, இவர்கள் டிவி யே கதி என கிடக்கிறார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, தன் உறவுப்பையனை அழைத்து வந்தார். “ஐயா! இந்தப் பையன் அளவுக்கதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான். இப்படி சாப்பிட்டால் உடல்நிலை கெட்டு விடும் என புத்திமதி சொல்லுங்கள், என வேண்டிக் கொண்டார்.நாயகம்(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அம்மணி! தாங்கள் இப்போது அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள், மூன்று நாட்கள் கழிந்து வாருங்கள், என்றார்கள்.

அப்பெண்ணும் மூன்று நாள் கழித்து வந்தார். அந்தப் பையனை அருகில் அழைத்த நாயகம் (ஸல்) அவர்கள், “தம்பி! இனி இனிப்பை அதிகமாக சாப்பிடாதே. உடல்நிலை கெட்டுவிடும், என்றார்கள்.அந்தப் பெண்ணுக்கோ கோபம்.“இதை நீங்கள் அன்றே அவனிடம் சொல்லியிருக்கலாமே! இன்னொரு தடவை ஏன் என்னை அலைய வைத்தீர்கள், என்றார்.நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் சாந்தமாக,“அம்மா! தாங்கள் கோபிப்பது சரிதான். ஆனால், அன்று நான் அவனுக்கு புத்திமதி சொல்லும் தகுதியில்லாமல் இருந்தேன். ஏனெனில், எனக்கே இனிப்பு பண்டம் சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்தது. இந்த மூன்று நாளாக கஷ்டப்பட்டு முயன்று இனிப்பு பண்டம் சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டேன். என்னிடமே அந்த வழக்கம் இருந்த போது, மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதியில்லாதவன் ஆகிவிடுகிறேன். எனவே தான் அன்று சொல்லவில்லை, என்றார்கள்.அப்பெண் ஆச்சரியப்பட்டார். இனியாவது குழந்தைகளை டிவி பார்க்கக்கூடாது எனச் சொல்லி, ரூமில் அடைத்து விட்டு, நீங்கள் தனியாக டிவி பார்க்கும் வழக்கத்தை கைவிடுவீர்களா?

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar