தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். வடை மாலையுடன் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த கால பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.