மதுரை: மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் பகுதியில் சிறிய அளவிலான சறுக்கு பாலம் நிரந்தரமாக அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாக கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார். மாநகராட்சி சார்பில் நடந்து வரும் பல வளர்ச்சிப் பணிகளை நேற்று பார்வையிட்டார். இதில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 30 கோடியில் கட்டப்பட்டு வரும் திருமலைராயர் படித்துறை, ஆரப்பாளையம் உயர்மட்ட பாலங்களின் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். பழமார்க்கெட் கட்டுமான பணிகள், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் மற்றும் வைகை ஆற்றுப்பகுதியை அழகுபடுத்தும் பணிகளை பார்வையிட்டார். அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் நிரந்தரமாக சிறு சறுக்கு பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கமிஷனர் சந்தீப் நந்துாரி, நகர் பொறியாளர் மதுரம், நகர்நல அலுவலர் யசோதாமணி, செயற்பொறியாளர்கள் சந்திரசேகர், ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.