காதுகளுக்கு அழகு வேதம், தர்ம சாத்திரம் போன்றவற்றைக் கேட்பதுதான்; தங்கத்தால் செய்யப்பட்ட குண்டலங்கள் அல்ல. கைகள் தானம் கொடுப் பதால்தான் அழகு பெறும்; தங்கக் காப்பினால் அல்ல. அதுபோல, கருணை நிறைந்த பரோபகாரிகளின் உடம்பானது பரோபகாரத்தாலேயே அழகு பெறுகிறது; வாசனை மிகுந்த சந்தனத்தால் அல்ல. நல்லவற்றைக் கேட்பது, தானம் செய்வது, பரோபகாரம் - முதலியவையே இயற்கையான அழகு.