பதிவு செய்த நாள்
30
ஜூன்
2016
10:06
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா, ஜூலை 28ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 5ல் தேரோட்டம் நடக்கிறது. இக்கோயில் விழா முன்னேற்பாடு குறித்தான கூட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செருக்கூர் திருமணமண்டபத்தில், கலெக்டர் (பொறுப்பு)முத்துகுமரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சந்திரபிரபா, நகராட்சி தலைவர் செந்தில்குமாரி, ஒன்றிய தலைவர் காளிமுத்து,தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, மாவட்டகவுன்சிலர் முத்தையா, வங்கி தலைவர்கள் முத்துராஜ், சிந்துமுருகன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து, முதலுதவி சிகிச்சை மையம் போன்ற அடிப்படை வசதிகளை சம்பந்தபட்ட துறையினர் மேற்கொள்ளவேண்டும். சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும். ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், மின்சாரம் மற்றும் தீயணைப்புதுறையினர் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பன உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் (பொறுப்பு) முத்துகுமரன் அறிவுறுத்தினார்.