பதிவு செய்த நாள்
30
ஜூன்
2016
10:06
செய்யூர்: சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற, வீரபோகம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில், மூன்று கோவில்களில் உண்டியலை உடைத்து, துணிகர கொள்ளை நிகழ்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா, வீரபோகம் ஊராட்சி பொன்னியம்மன் கோவில், கங்கையம்மன் கோவிலில், கடந்த, 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், நேற்று காலை கோவில் பூசாரி வழக்கம் போல், கோவிலுக்கு சென்று பார்த்த போது, பொன்னியம்மன், கங்கையம்மன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள், கோவில் உண்டியலில் இருந்த பணம் ள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கிராமத்தின் அருகில் உள்ள பெரும்பாக்கம் ஊராட்சியில், அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து, வயல்வெளிக்கு கொண்டு சென்ற கொள்ளையர்கள், அதிலிருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இரண்டு கோவில்களிலும், 55 ஆயிரம் ரூபாய் அளவுக்கு, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என, பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.