ஷீரடி சாய் பைரவர் கோவிலில் துனி- அக்னி குண்டம் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2016 10:06
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் செல்வபுரத்தில், ஷீரடி சாய் பைரவர் கோவிலில், துனி- அக்னி குண்டம் திறப்பு விழா நடந்தது. செல்வபுரத்தில் உள்ள ஷீரடி சாய் பைரவர் கோவிலில் புதிய துனி அமைக்கப்பட்டுள்ளது. ஷீரடி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி, கோவை ஐ.ஓ.பி., காலனியில் உள்ள பாபா கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின், அங்கிருந்து செல்வபுரத்தில் உள்ள ஷீரடி சாய் பைரவர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, துனி- அக்னி குண்டம் திறப்பு விழா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திருக்கோவில் அறங்காவலர் சாய் செந்தில்குமார் செய்து இருந்தார்.