பதிவு செய்த நாள்
01
ஜூலை
2016
11:07
திருப்பாச்சூர்: வரும் செப்., 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பாச்சூரில், சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது:இங்கு, 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 1 அடியில் இருந்து, 9 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் வரை, இங்கு தயாரிக்கப்படுகிறது. தற்போது செய்துள்ள விநாயகர் சிலைகளை நன்றாக உலர வைத்து, 10 தினங்களுக்கு பின், வர்ணம் பூசும் பணியில் ஈடுபடுவோம். தற்போது, நம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர், நேரில் வந்து, ஆர்டர் கொடுத்து சென்றுள்ளனர்.இந்தாண்டு, விநாயகர் சிலைகளின் விலை, 50 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.