கடலுார்: மேல்குமாரமங்கலம் பிரகந்நாயகி கோவிலில் 10ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலத்தில் எழுந்தருளியுள்ள பிரகந்நாயகி சமேத ரக்ஷாஜாதேஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு வரும் 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு திவ்யநாம சங்கீர்த்தனம் நடக்கிறது. 10ம் தேதி காலை 7:00 மணிக்கு ஜானவாசம், பஜனை, 8:00 மணிக்கு குரு கீர்த்தனை, திவ்யநாம சங்கீர்த்தனம், சிவ அஷ்டபதி பஜனை, 11:00 மணிக்கு திருக்கல்யாணம், மதியம் 1:00 மணிக்கு நலங்கு, ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது. இதில், அமைச்சர் சம்பத், கிருஷ்ணாலயா தியேட்டர் உரிமையாளர் துரை ராஜ் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.