பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
04:07
சாதுர்யகுணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! (பதவி உயர்வு உண்டு)
சூரியன், சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை செய்வர். புதன் ஜூலை 24க்குப் பிறகு சிம்மத்தில் இருந்து முன்னேற்றம் அளிப்பார். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குரு ஆக.1ல் கன்னி ராசிக்கு செல்வதால் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதார வளம் பெருகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். ஜூலை 31க்கு பிறகு கணவன்-, மனைவி இடையே கருத்துவேறுபாடு மறையும்.
தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். பகைவர் தொல்லை, அரசு வகையில் பிரச்னை முதலியன ஜூலை 24க்கு பிறகு மறையும். ஆக.1க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் நல்ல வளர்ச்சி பெறும். ஆக. 27,28,31ம் தேதிகளில் திடீர் பண விரயம் ஆகலாம்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஜூலை 24 வரை வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் தொகை கிடைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும். ஜூலை 22,23ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர்.
விவசாயிகள் எள் கரும்பு போன்ற பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காணலாம்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இல்லாததால் படிப்பில் கவனம் தேவை. ஆக.1க்குப் பிறகு கல்வி வளர்ச்சி ஏற்படும்.
பெண்கள் குதுõகலமாக இருப்பர். ஆக. 1க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
நல்ல நாள்: ஜூலை 16,17,22,23,24,25,26, 29,30, ஆக.2,3, 9,10,11,12,13
கவன நாள்: ஜூலை 18,19, ஆக. 14,15 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: செந்துõரம், வெள்ளை
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.