பதிவு செய்த நாள்
22
ஜூலை
2016
11:07
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன.கரூர் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள ஆதி மாரியம்மன் கோவில், நகரின் நடுநாயகமாக விளங்கும் மாரியம்மன் கோவில்களில், இன்று அதிகாலை முதல் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், சந்தனம், நெய் மற்றும் திரவியப்பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள, அலங்கார வள்ளி சவுந்திரநாயகி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், ஆத்தூர் சோழியம்மன் கோவில், வாங்கல் புதுக்காளியம்மன் கோவில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில், மகாதானபுரம் மகாலட்சுமி கோவில், மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதேபோல், ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை பெரிய கடைவீதி மாகாளியம்மன் கோயிலில் 10008 எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.