அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் திடீர் விரிசல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2016 11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது,பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், 11 நிலைகளுடன், 217 அடி உயரத்துடன் கோவிலின் கிழக்கு திசையில், ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகளுக்காக, கோபுரத்தில் தூய்மை செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபடும் போது, ராஜகோபுரத்தில் உள்ள மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள நான்காவது தூணில், மேற்கூரையில் மூன்றாவது பீமில், நான்கு அடி தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். தகவலறிந்த இணை ஆணையர் ஹரிப்பிரியா, கோபுரத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படாமல், மூலிகைகளால் விரிசல்களை சரி செய்ய அறிவுறுத்தினார். அதன்படி அந்த விரிசல்களை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ராஜகோபுரம் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.