பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் ஆடிமாத பிரம்மோற்சவ விழாவையொட்டி திருத்தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 13ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 14ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 15ம் தேதி முதல் மாலை தோறும் உற்சவர் அம்மன் புறப்பாடு நடந்தது. நேற்று (22ம் தேதி) காலை செடல் உற்சவமும் மதியம் 2:00 மணியளவில் திருத்தேரில் உற்சவர் அம்மன் சிற ப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று 23ம் தேதி மஞ்சள்நீர் உற்சவம், மாலை அம்மன் புறப்பாடும்; வரும் 25ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.