பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, உற்சவர் தாயார் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு, மூலவர் ஹேமாம்புஜவல்லி தாயார், பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவதிகை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.