பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி மாத சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. விழாவையொட்டி சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.