நான்கு சீடர்களுடன் மட்டுமே காட்சி தரும் குரு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கைலாசநாதர் கோவிலில் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர்கள் ஆங்கீரசர், அத்திரி, காஷ்யபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர் ஆகியோர். இவர்கள் சிவ வடிவான தட்சிணாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றனர். இந்தக் காட்சியே சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பில் தட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது அரிது. மலையடிவாரத்தில் அமைந்த இக்கோவிலில், தட்சிணாமூர்த்தி நந்தி மீது இருப்பது மற்றொரு சிறப்பு. அலைபேசி: 97919 94805