பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சதுரகிரி மகாலிங்கம் சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 28 முதல் ஆக., 4 ம் தேதி வரை நடக்கிறது. பக்தர்கள் காலை 6.00 முதல் மாலை 4.00 மணி வரை மட்டும் மலை ஏற அனுமதிக்கப்படுவர். மலை ஏறும் பக்தர்கள் நடைபாதையை மட்டும் பயன்படுத்த வேண்டும். குறுக்குப்பாதையைப் பயன்படுத்தக் கூடாது. வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது. மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மலை ஏறும் போது மலைவாழ் மிருகங்களுக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் கொடுக்கக் கூடாது. மதுபாட்டில்கள், புகையிலை, பீடி, சிகரெட், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை கொண்டு செல்லக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.