தேவகோட்டை: தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடிபொங்கல் திருவிழா நடந்தது. ஆடி முதல் திங்கள் அன்று விருச்சுழி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள பூர்வீக கோயிலிலிருந்து மண் எடுத்து நகர பள்ளிக்கூடம் அருகே கோயில் மேடை அமைக்கப்பட்டு முதல் செவ்வாய் காப்புகட்டி முதல் பொங்கலிடப்பட்டது. இரண்டாவது செவ்வாயான நேற்று கோயில் சார்பில் பகல் புள்ளி பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.