பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
12:07
திருப்போரூர், கந்தசாமி கோவில், சரவண பொய்கை குளத்திற்கு, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவில், பிரசித்தி பெற்றது. மேலும், பிரம்மேற்சவ விழாவும், ஆண்டுதோறும் பிப்ரவரி துவங்கி, மார்ச் மாதம் வரை நடைபெறும். பக்தர்கள், கோவில் அருகில் உள்ள சரவண பொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை வழிபடுவர். குளத்தைச் சுற்றிலும், நீ ண்டகாலத்திற்கு முன் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பலமிழந்துள்ளது. குளத்தை ஒட்டிய சாலைகள் உயர்ந்து, சுற்றுச்சுவர், சாலைக்கும்கீழே தாழ்ந் துள்ளது. எனவே, புதிய சுற்றுச்சுவர் அமைக்க, 2013–14ம் ஆண்டில், சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், 27 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2014ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் துவக்கப்பட்டன. பல்வேறு இடையூறுகளால், இப்பணி தாமதமாகி, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இச்சுவர், 450 மீ., சுற்றளவு, 2 அடி உயரம் அமைக்கப்பட்டு, சுவரின் மேல், 4 அடி உயர கம்பி தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும், 11 நுழைவாயில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.