ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 கி.மீ., தொலைவில் நான்குபுறமும் சிவாலயம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2016 01:07
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயில்கள், செயற்கைக்கோள் உதவியுடன் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமைவாய்ந்த கோயில்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளன. இக்கோயில்கள் குறித்து தொல்லியத்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட திருமாலுகந்தான் கோட்டை எனப்படும் டி.எம்.கோட்டையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருணாகடாச்சி அம்மன் சமேத செஞ்சடைநாதர் கோயில் உள்ளது. இதன் மகிமையை அறிந்த தொல்லியல் துறையினர் நவீன கருவிகள் மூலம் ஆய்வை துவக்கியுள்ளனர். 50 அடி உயரத்தில் கருங்கல்லால் செதுக்கி வடிவமைக்கப்பட்ட கர்ப்பகிரக விமானம், ஏக வர்ண கோபுரம், கோபுர கலசம் கருங்கல்லால் ஆனதாகும். இக்கோயில் அமைந்துள்ள இடமான டி.எம்.கோட்டை கிராமத்தில் இருந்து செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் ஒரே சம அளவிலான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் உயரத்தில் இருந்து பார்த்தால் துல்லியமாக 100 கி.மீ., துõரத்தில் நான்கு கோயில்கள் அமைந்துள்ளது. இவை அறிவியல் தொழில் நுட்பத்திற்கு சவாலாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கோயில் ஸ்தானிகர் செண்பக சுப்பிரமணியன் கூறியதாவது: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இயங்கும் தொல்லியல் துறை அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் அடிக்கடி வந்து ஆய்வு செய்கின்றனர். நவீன ரக செயற்கைக்கோள் தொடர்புடைய கருவிகள் மூலம் ஆராய்ந்ததில் கோயிலுக்கு கிழக்கில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மேற்கில் சங்கரன் கோயில், வடக்கே மதுரை மீனாட்சியம்மன் கோயில், தெற்கே திருச்செந்துõர் முருகன் கோயில் 100 கி.மீ., தொலைவில் நான்கு திசையிலும் சமஅளவில் உள்ளதை கண்டறிந்துள்ளனர். அதன் டிஜிட்டல் வரைபடத்தை ஆய்விற்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இங்கு சிவபெருமானுக்கு வலதுபுறம் இல்லாமல், இடதுபுறத்தில் அம்மன் சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது, என்றார்.