குன்றத்தூர் முருகன் கோயிலில் கிருத்திகை விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2016 03:07
குன்றத்தூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணி சென்றார். வழியில், ஒரு குன்றின் அடிவாரத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். பிற்காலத்தில் குலோத்துங்க சோழன், ஆட்சி செய்தபோது, குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டினார். முருகனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம், மலையடிவாரத்தில் உள்ளது. இவர் ‘கந்தழீஸ்வரர்’ எனப்படுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர். இத்தலத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.