சஞ்சீவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2016 11:07
டேராடூன் : ராமாயணத்தில் அனுமர் கொண்டு வந்ததாக கூறப்படும் சஞ்சீவினி மூலிகையை இமயமலையிலிருந்து கண்டுபிடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. ராமாயணத்தில் லட்சுமணன் காயமடைந்து உயிருக்கு போராடிய போது சஞ்சீவினி மூலிகையை தேடி அனுமன் செல்வார். மூலிகையை சரியாக அடையாளம் காண முடியாமல் போகவே, சஞ்சீவினி மலையையே துாக்கி பறந்து வந்து லட்சுமணின் உயிரை காப்பார். இந்த சஞ்சீவினி மூலிகை தற்போது இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில் சீன எல்லையை ஒட்டிய இமயமலையில் உள்ள துரோனகிரி பகுதியில் சஞ்சீவினி மூலிகையை கண்டுபடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில மாற்று மருத்துவத்திற்கான அமைச்சர் சுரேந்திர சிங் நேகி கூறியதாவது: சஞ்சீவினி மூலிகை எனும் அற்புத மருந்தை கண்டுபிடிக்க நாம் முயற்சிக்க வேண்டும். முயற்சித்தால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும். ஆகஸ்ட் முதல் சஞ்சீவினி மூலிகையை தேடும் பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.