எலச்சிபாளையம்: பெரியமணலி பண்ணாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சண்டி யாக விழா நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, வேலகவுண்டம்பட்டி அடுத்த, பெரியமணலி பண்ணாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் நேற்று சண்டி யாக விழா நடந்தது. இதில், 1,008 வகையான மூலிகைகளை கொண்டு, அந்தணர்கள் வேதங்களை ஓத யாகம் நடந்தது. பண்ணாரி சுவாமிகள் தலைமை வகித்தார். காமாட்சிபுரம் ஆதினம், பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். இதில், 200க்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.