பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
11:07
கனகம்மாசத்திரம்: கனகம்மாசத்திரத்தில் உள்ள, முத்துமாரியம்மன் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை நடுவில் அமைந்து உள்ளது, கனகம்மாசத்திரம். இக்கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 53ம் ஆண்டு கிருத்திகை திருவிழா நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, அம்மனை வழிபட்டனர். சிலர் பறவை காவடி எடுத்து, குழந்தைகளுடன் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்றிரவு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா முடிந்ததும், காவடி, அலகு குத்தி வந்த பக்தர்கள் அவற்றுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டனர்.