பழநி, ஆடிவெள்ளியை முன்னிட்டு பழநியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடிவெள்ளியை முன்னிட்டு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடந்தது. மாலை 6.30 மணிக்குமேல் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. மாரியம்மன் கோயிலில் உச்சி காலத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயிலில் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மறுபூஜை நடந்தது. இதேபோல திருஆவினன்குடிகோயில் துர்க்கையம்மன், அழகுநாச்சியம்மன்கோயில், வன துர்க்கையம்மன்கோயில், புதுதாராபுரம்ரோடு ரெணகாளியம்மன், புதுநகர் முத்துமாரியம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பால், கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.