சாயல்குடி தர்ம முனீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வில்வாகை இலை பிரசாதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2016 12:07
சாயல்குடி, :சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கற்பக விருட்சமான வில்வாகை மரத்தின் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோயிலில் கற்பக விருட்சமாக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்வாகை மரங்கள் உள்ளன. மருத்துவகுணம் கொண்ட இதன் இலைகள் மூலவர் முனீஸ்வரரின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. குழுந்தைபேறு, தீராத நோயினால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வில்வாகை மரத்தின் இலைகளை காயவைத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கோயில் பூஜாரி சடையாண்டி கூறுகையில்,“ வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலின் கற்பக விருட்சமான வில்வாகை என்ற அரியவகை மூலிகை மரங்கள் அடுத்தடுத்து வளர்ந்துள்ளது பெருமைக்குரியதாகும். குழந்தை பேறு, கை, கால் வலி, தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். அவர்களுக்கு வில்வாகை மரத்தின் இலைகளை மூலவரின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பின் பிரசாதமாக வழங்கிவருகிறோம்,” என்றார்.