இந்த மாதம் சூரியன், ராகு, புதன் ஆகியோரால் நன்மைகள் பல கிடைக்கப் பெறலாம். மேலும் ஆக.26-ம் தேதி வரை சுக்கிரனும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். அனைத்து திட்டங்களும் நினைத்தபடி நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். பெண்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள் சேரும். சுக்கிரனால் மாத முற்பகுதியில் சிறப்பான பணவரவு இருக்கும். செப். 1,2ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக.17,18, செப்.13,14ல் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். இந்நாட்களில் அவர்கள் வகையில் ஒதுங்கி இருப்பது நல்லது. செவ்வாயின் நிலையால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. பாதுகாப்பை பலப்படுத்துவதும், நகைகளை லாக்கரில் வைப்பதும் நல்லது.
தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் மேம்படும். லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செவ்வாயால் கடைகளில் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பாதுகாப்பை பலப்படுத்தவும். வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கடுமையாக உழைக்க வேண்டி வந்தாலும், அந்த பளு தெரியாத அளவுக்கு வருமானமும் கிடைக்கும் என்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். போட்டியாளர்கள் வகையில் சிரமம் இருந்தாலும், ராகுவின் நிலையால் அதை எளிதில் முறியடித்து விடுவீர்கள். செப். 3,4,8,9ல் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். ஆக. 21,22ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது.
பணியாளர்களில் தனியார் துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் மத்தியில் நல்லபெயர் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். ராகுவால் பெண்களின் ஆதரவு கிடைக்கும். சேமிக்கும் அளவு வருமானம் இருக்கும். ஆக.29,30, 31ல் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கடும் வேலைப்பளுவை சந்திப்பர்.
கலைஞர்கள் மாத முற்பகுதியில் வளர்ச்சி காண்பர். சிலருக்கு விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சுமாரான பலன் பெறுவர். சிலருக்கு மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும். விவசாயிகளுக்கு கரும்பு, எள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். பால் வியாபாரம் விருத்தியடையும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அரசு வேலையில் இருக்கும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஆக.23,24 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். செப். 5,6, 7ல் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பம் சுகத்துடன் ஆனந்தமாக இருக்கும். சகோதரிகள் மூலம் பணம் கிடைக்கும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செப். 10,11,12ல் பொருளாதார வளம் மேம்படும். நற்சுகம் ஏற்படும். காரிய அனுகூலம் ஏற்படும். புத்தாடை, நகை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு ஆக. 21,22,23, 24,29,30,31, செப். 1,2,5,6,7,10,11,12, ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான ரிஷபத்தில் சந்திரன் ஆக. 25,26ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.