மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அபார ஆற்றல் பிறக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2016 09:08
எல்லாரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என எண்ணும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, குரு தொடர்ந்து நற்பலன் தருவார்கள். மற்ற சிறிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் இல்லை. உங்கள் திட்டங்களை குரு பகவான் வெற்றிகரமாக செய்து முடிக்க உதவுவார். அலைச்சலும், மன பளுவும் குறையும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் கூடும். உங்கள் பணிகளுக்கு பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் வசதிகள் பெருகும். மகிழ்வான சம்பவங்கள் நிகழும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஆக. 17,18, செப்.13,14ல் அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.8,9ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அவர்கள் வகையில் ஆக. 23,24ல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் சனி, குருவின் பலத்தால் நல்ல லாபம் கிடைக்கும். தடைகள் விலகி முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கலாம். குடும்ப பிரச்னையில் இருந்து விடுபட்டு வியாபாரத்தில் முழு கவனத்தை செலுத்தலாம். அபார ஆற்றல் பிறக்கும். பெண்களைப் பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். ஆக. 27,28ல் எதிர்பாராத அளவு லாபம் கிடைக்கும். ஆக. 19,20 செப்.10,11,12,15,16ல் கல்லாவை நீங்களே கவனித்துக் கொள்ளவும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, -செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை இந்த மாதம் கேட்டு பெற்று கொள்ளவும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். செப். 5,6,7 சலுகைகளைக் கேட்டுப் பெற விண்ணப்பிக்கலாம். அலுவலகத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார வளம் கூடும்.
அரசியல்வாதிகள் சிறப்பான பலனை காண்பர். புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். ஏற்கனவே பல்வேறு நன்மைகளை கிடைக்கப் பெற்றிருக்கும் நீங்கள், புதனால் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடும் வல்லமையும் பெறுவீர்கள்.
விவசாயம் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை, காய்கறிகள், பயறு, நெல், கோதுமை வகை நல்ல மகசூலை கொடுக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்து வந்த அக்கம் பக்கத்தினர் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். பெண் காவலர்கள் உயர் பதவி அடைய வாய்ப்பு இருக்கிறது. வேலை மற்றும் சுய தொழில் செய்யும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். ஆக.26க்கு பிறகு சகோதரிகளால் பொருளாதார வளம் கூடும். ஆக. 21,22ல் புத்தாடை, நகை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். ஆக 29,30,31ம் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். கேதுவின் நிலையால் நகைகளை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
நல்ல நாள்: ஆக. 17,18,21,22,27,28,29, 30,31 செப்.5,6,7,8,9,13,14 ஆகிய நாட்களில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தை நடத்தலாம். வெளியூர் பயணம் செல்லலாம். புதிய திட்டங்களைத் துவங்கலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான சிம்மத்தில் சந்திரன் செப்டம்பர் 1,2ல் இருப்பார். இந்த நாட்களில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரியனை வழிபட்டு வாருங்கள். அம்மன் வழிபாடு துன்பத்தில் இருந்து உங்களை காக்கும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்தால் உறவினர் வகையில் உள்ள பிரச்னை மறையும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »