கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வசதிகள் தேடி வரும் குடும்ப மகிழ்ச்சி கூடும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2016 09:08
நல்ல எண்ணங்களின் விளைநிலமான கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். சுக்கிரன் ஆக.26க்கு பிறகு சாதகமாக நின்று நற்பலனை தருவார். புதன் வக்கிர கதியில் இருந்தாலும் அவரால் கெடுபலன் வராது. மாத முற்பகுதியில் அலைச்சல் இருக்கும். செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை. பிற்பகுதியில் வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் வசதிகள் தேவையான அளவு இருக்கும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும். ஆக. 19,20, செப். 15,16ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப். 10,11,12ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். ஆனால் ஆக. 25,26ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். பணியாளர்கள் சுமாரான நிலையில் இருப்பார்கள். அதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். ஆக. 26-க்கு பிறகு பணி தொடர்பான இடையூறுகளை எளிதில் முறியடிப்பீர்கள். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செப்.8,9ல் சிறப்பான பலன் காணலாம். எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குரு பகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் லாபம் கிடைக்க பெறுவர். ஆனால் ராகுவின் நிலையால் அலைச்சலையும், போட்டியாளர்களின் தொல்லையையும் சந்திக்க வேண்டியது இருக்கும். ஆக. 17,18,21,22, செப்.13,14ல் சிறு தடைகள் வரலாம். ஆக.29,30,31ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
பணியாளர்கள் வகையில் செலவு கூடும் என்றாலும், அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். புதிய கிளைகள் அல்லது தொழில் துவங்கும் முயற்சியில் இருப்பவர்கள், அதற்குரிய இடங்களை முடிவு செய்யும் போது பத்திரங்களைக் கவனமாகப் படித்துப் பார்த்து வாங்க வேண்டும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடைஞ்சல் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ்,கவுரவத்திற்கு பங்கம் வராது.
அரசியல்வாதிகள், சுமாரான நிலையில் இருப்பர். சிலருக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும்.
மாணவர்கள் சுமாரான நிலையில் இருப்பர். சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. சிலருக்கு மேல்படிப்பில் விரும்பிய பாடம் அதிக முயற்சியின் பேரில் கிடைக்கும். புதன் வக்கிரம் அடைவதால் கல்வியில் தொய்வு நிலை ஏற்படாது. ஆசிரியர்கள், பெற்றோர் ஆலோசனைப்படி நடந்தால் முன்னேற்றம் அதிகமாகும். விவசாயிகள் அதிக சிரத்தை எடுத்து வருமானத்தை காண்பர். காய்கறி, கீரை வகைகள் நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகலாம். புதிய வழக்குகளில் சிக்காத அளவுக்கு பக்கத்து நிலத்துக்காரர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போக வேண்டும். ஆக.23,24ல் புத்தாடை, நகை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். செப். 1,2ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செவ்வாயால் அக்கம் பக்கத்தினரால் தொல்லை ஏற்படும். நகைகளை லாக்கரில் வைப்பது பாதுகாப்பைத் தரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.
நல்ல நாள்: ஆக.19,20,23,24,29,30,31 செப்.1,2,8,9,10,11,12,15,16 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள் ஆகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைத் துவங்குங்கள். தொழில், பணி தொடர்பான கோரிக்கை நிறைவேற விண்ணப்பியுங்கள்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம்தான் சந்திராஷ்டமம். உங்கள் ராசிக்கு 8ம் இடமான கன்னியில் சந்திரன் செப். 3,4ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்டஎண்: - 2, 4,8 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். பைரவரை வழிபட்டு ஏழைகளுக்கு தானம் செய்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »