பக்தர்களின் நேர்த்திக்கடன் முடி குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2016 12:08
பரமக்குடி: நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய முடி ஏலம் விடாமல் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் தோஷ நிவர்த்திக்கு சிறப்பு வாய்ந்தது என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வ ருகின்றனர். பரிகார பூஜைகளுக்கு பின் காரியம் கைகூடினால் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடி செலுத்துவது வழக்கம். இவ்வாறு செலுத்த ப்படும் முடி அப்புறப்படுத்தாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவை மாத கணக்கில் தேங்கியுள்ளதால் வெளியாகும் ஒருவித துர்நாற்றம் பக்தர்களை நிலைகுலையச் செய்கிறது. மேலும் கோயில் வளாகத்தில் சுகாதார கேடும், தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. முடியை உடனுக்குடன் அப்புறப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.