ஸ்ரீநாத்ஜி எனும் புகழ்பெற்ற கோயில் ராஜஸ்தானில் அமைந்துள்ளது. இங்கு ஏழு வயது சிறுவன் தோற்றத்தில் கோயில் கொண்டுள்ளார் பகவான் கிருஷ்ணன். இங்கு கண்ணனுக்கு தினமும் எட்டு விதமாக அலங்காரம் செய்து நிவேதனம் படைப்பார்கள். அதிகாலை ஐந்து மணிக்கு மங்களா; காலை ஏழரை மணிக்கு சிருங்காரா எட்டரை மணிக்கு இடையர் போன்று கவால் அலங்காரம், பத்தரை மணிக்கு ராஜ்போக், பிற்பகல் நான்கரை மணிக்கு உத்தர்பான் மாலை ஆறு மணிக்கு ஆரத்தி. ஏழு மணிக்கு சோபனம் - சயனம் என்று எல்லா பூஜா காலங்களிலும் அலங்காரம் செய்து எட்டு விதமான இனிப்புகள் சமர்ப்பிக்கிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தீபாவளி அன்று சிறப்பு அலங்காரம் செய்து 58 வகையான இனிப்புகளைப் படைத்து, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.