பெங்களூரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் மிக்கதும் புராதன பெருமைகொண்டதுமான சிவகங்கா என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள சிறிய மலையில் பழமைவாய்ந்த கங்காதீஸ்வரர் குகைக் கோயில் அமைந்துள்ளது. அபிஷேக நேரத்தில் சிவாச்சாரியார் நெய்யை லிங்கத்தின்மீது ஊற்றித் தடவிய பின்னர், நெய்யானது சில நிமிடங்களில் வெண்மை நிறத்தில் வெண்ணெயாக உருமாறிவிடுகிறது. இந்த அதிசய வெண்ணெய்யை பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். இது தீராத நோய்களுக்கு அருமருந்தாக இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.