காளஹஸ்தி என்று அழைக்கப்படும் காளத்தி மலையில் ஒவ்வொரு பட்சத்தில் வரும் சதுர்த்தசி நாளும் நித்ய சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் சிவராத்திரியை ஒட்டிப் பெருந்திருவிழா நடைபெறுகின்றது. அந்த நாளில் தனிச்சிறப்பு அலங்காரத்துடன் காளத்திநாதர் பவனி வருகின்றார். திருவிழாவில் தேரோட்டம் திருக்கல்யாணம், மலைவலம், இடபவாகன சேவை முதலியன தனிச்சிறப்புடன் நடைபெறுகின்றன.