முருகப்பெருமானுக்கு புதுக்கோட்டை மாவட்டம், தவசுமலையில் மிகப்பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். ஆடிக் கிருத்திகை அன்று மிகவும் விசேஷ அலங்காரத்தில் முருகனை தரிசிக்கலாம். தினமும் காலை 7.00 மணிமுதல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும். விழாக்காலங்களில் தரிசன நேரம் மாறுபடும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருகனை ராஜ அலங்காரத்தில் கண்டு தரிசித்து ஆனந்திக்கலாம். இந்த கோயிலை புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமி அவர்கள் நன்றாக பராமரித்து வருகிறார். இந்த முருகனை வணங்கினால் தீராத வயிற்று வலியைத் தீர்த்து வைக்கிறார் என்பது கண்கூடு. செவ்வாய் தோஷம் விலகுகிறது. ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தாலும் நிறையபேர் இந்த தபசுமலை முருகனின் கோயிலிற்கு வந்து பூ வைத்து முருகனின் அருள்வாக்கு கேட்கிறார்கள். சிறப்பாக அருள்வாக்கு கிடைத்தால் மட்டுமே திருமணம் நடத்துகிறார்கள்.